Last Updated:
4 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இன்னும் 91 பேர் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்கள் வசம் இருக்கும் பிணைக் கைதிகளில் 4 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் சிலரை சிறைபிடித்துச்சென்றனர். ஓராண்டுக்கும் மேலாக நடந்த போர் அண்மையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 3 பெண்களை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளது. பதிலுக்கு தங்கள் வசம் இருக்கும் 33 இஸ்ரேலியர்களை அனுப்பி வைப்பதாகவும் அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.. ரஷ்ய அதிபர் புதின்!
இந்த நிலையில் இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இன்னும் 91 பேர் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
January 25, 2025 10:56 AM IST