சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரூபாய் 20 ஆயிரத்துக்கு ரமேஷ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
சென்னையில் சினிமா ஷூட்டிங் நடக்கும் போதெல்லாம் வந்து வாடகை வீட்டில் தங்குவார். இந்த நிலையில் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கஞ்சா கருப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் நேற்று முன் வைத்தார்.
இதையும் வாசிக்க: Ilaiyaraaja | “இசையிலேயே கவனமாக இருந்ததால்…” – மகளை நினைத்து உருகிய இளையராஜா
இந்த நிலையில் இன்று தனது வீட்டில் இருந்த பொருட்களை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் திருடியுள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு பேட்டி அளித்தார். தான் வசிக்கும் வாடகை வீட்டின் கதவை போலீசார் மற்றும் செய்தியாளர்கள் முன்பு நடிகர் கஞ்சா கருப்பு திறந்து ஆய்வு செய்தார். அப்போது கருணாநிதி மற்றும் ஸ்டாலின் கைகளால் வாங்கிய கலை மாமணி விருதை காணவில்லை என அவர் குற்றச்சாட்டினை வீட்டில் உரிமையாளர் மீது வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார். ஆனால் ரூபாய் 40,000 பணம் கடந்த மாதம் கொடுத்தேன் ஆதாரம் உள்ளது. சாவி என்னிடம் இருக்கும் போது அத்துமீறி கதவை உடைத்து உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
கலைஞர், ஸ்டாலின் கைகளில் கொடுத்த கலைமாமணி விருதை காணவில்லை. ரேஷன் கார்டு ஆதார் கார்டு பேங்க் புக் அனைத்தையும் திருடி சென்றிருக்கின்றனர். நான் வாடகை பணம் கொடுத்து விட்டேன். ஆனாலும் அத்துமீறி எனது வீட்டை உடைத்து அறைக்குள் புகுந்து உடைத்து உரிமையாளர் அடாவடி செய்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார்.
#JUSTIN சென்னை மதுரவாயில் கஞ்சா கருப்பு வாடகை வீட்டு விவகாரம்: இரு தரப்பு மாறி மாறி குற்றச்சாட்டு#GanjaKaruppu #Chennai #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/6CTAKVdIvv
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 25, 2025
கடந்த மாதம் கூட 40 ஆயிரம் அவருக்கு அனுப்பி உள்ளேன் ஆதாரம் உள்ளது. வாடகை வீட்டில் இருந்தால் எந்த உரிமையாளர் கதவை உடைத்து திருட்டுத்தனம் செய்வார்களா? நான் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறேன் நான் ஒன்னும் விபச்சாரம் செய்யவில்லை. எனது பொருளை காணவில்லை எனக்கு தான் வலிக்கிறது.
நான் தான் கத்துகிறேன். சாவி என்னிடம் உள்ளது அத்துமீறி உடைத்து உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கபட்டுள்ளது. என்னைப் போன்று யாரையோ ஒரு ஆளை வைத்து பேசி எடுக்கப்பட்டிருக்கிறது” என பரபரப்பு பேட்டி எடுத்தார்.
கஞ்சா கருப்பின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் ரமேஷ், “கஞ்சா கருப்பு வீட்டின் சாவியை ஒப்படைத்துவிட்டு புறப்பட்டுவிட்டார். ஆனால் தற்போது சினிமாவில் வருவதுபோல அதைக்காணவில்லை, இதைக்காணவில்லை என நாடகம் ஆடுகிறார்.
இன்று காலை 20 குண்டர்களை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுத்தார். ஒருவர் பிரபலம் என்பதால் காவல்துறையும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. வாடகை பாக்கியை கேட்டதற்கு அவர் இவ்வளவு செய்கிறார். அந்தக் கலை மாமணி விருதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் எனக்கு அதனால் என்ன பயன் எனவும் எப்போதும் கேட்டாலும், எனக்கு அதிமுகவில் ஆட்களையும், பல பிரபலங்களை தெரியும் என மிரட்டுகிறார்.
ஆனால் கடனுக்கு வட்டிக்கட்டிக்கொண்டு சிரமப்படுகிறேன். எனது வீட்டை மதுபான பாட்டில்களை அடுக்கி வைத்து லாட்ஜ் போல தான் பயன்படுத்தினார். 3 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்தார். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்துக்கொண்டு 50 ஆயிரம் ரூபாயை கழித்துக்கொள்ள கூறினார்கள். மிச்சப்பணத்தை கேட்டதற்கு பிரச்சனை செய்கிறார்” என்றார்.
January 25, 2025 6:34 PM IST