Last Updated:

சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளார். அவர் மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News18

சூர்யா நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதையும் வாசிக்க: Agathiya | பா.விஜய் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் ‘அகத்தியா’ படத்தின் 3-வது சிங்கிள் எப்படி? 

இந்தப் படம் முடிந்த கையுடன் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார். இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில் ‘சூர்யா 47’வது படத்தை மலையாள இயக்குநரும், நடிகருமான பேசில் ஜோசஃப் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ படத்தை இயக்கியவர் பேசில் ஜோசஃப். அந்தப் பேண்டஸி படமான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



Source link