Last Updated:

Union Budget 2025 | சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும். உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

News18News18
News18

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ரூ.20 கோடி கடன் உத்தரவாதம்

பட்ஜெட்டில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார். மேலும் MSME-க்கு கடன் வழங்க ரூ.1.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் எனவும், உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும், 5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Also Read: Budget 2025 Live: 2025 – 26 நிதி நிலை அறிக்கை – புதிய வருமானவரி மசோதா அடுத்த வாரம் தாக்கல்

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம்

மேலும், அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 6 ஆண்டு திட்டத்தின் கீழ், துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!



Source link